×

பிளஸ்-1 மாணவி தூக்கிட்டு தற்கொலை

 

காங்கயம், ஏப்.27: காங்கயம் அருகே வயிற்று வலியால் பிளஸ்-1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காங்கயம் அருகே நிழலி எஸ்.வி.புரம் பகுதியை சேர்ந்த 17 வயது மகள் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் அந்த மாணவி அடிக்கடி வயிற்று வலியால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவதிப்பட்டு வந்த மாணவி மனமுடைந்து நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே மாணவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

The post பிளஸ்-1 மாணவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kangayam ,Gangayam ,
× RELATED மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவதால் குடிநீரின்றி மக்கள் தவிப்பு