×

மதங்களை பயன்படுத்தி ஆட்சிக்கு வர முயலும் காங்கிரஸ்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

பெலகாவி: காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு மதங்களை பயன்படுத்துகிறது என்று ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பெலகாவி மாவட்டம் காக்வாடில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், ‘காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்று மதத்தை அடிப்படையாக வைத்து அரசியல் செய்து வருகிறது. இது போன்ற அரசியல் நாட்டில் இதற்கு முன்பு எப்போதும் நடந்ததில்லை. அவர்களது ஆட்சிகாலத்தில் இஸ்லாமியர்களை சமாதானப்படுத்த 4 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தார்கள். ஆனால் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு தருவது சட்டத்துக்கு விரோதமானது.

இந்திய வரலாற்றில் அரசியல் கட்சிகள் தர்மத்தின் ஆதரவுடன் தேர்தலை சந்திப்பார்கள். ஆனால் மதத்தை பயன்படுத்துவது காங்கிரஸ் மட்டுமே. பொருளாதாரத்தில் பின்தங்கிய இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ இடஒதுக்கீட்டின் பயனை அனுபவித்தால் அதை நாங்கள் வரவேற்போம். ஆனால் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சட்டம் அனுமதிக்கவில்லை. எனவே, வாக்காளர்கள் பாஜவுக்கு தேர்தலில் பெரும்பான்மையை வழங்க வேண்டும்’ இவ்வாறு அவர் பேசினார்.

The post மதங்களை பயன்படுத்தி ஆட்சிக்கு வர முயலும் காங்கிரஸ்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,Union Minister ,Rajnath Singh ,Belagavi ,Union Defense Minister ,Dinakaran ,
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...