×

நாட்டுத்துப்பாக்கி 150 தோட்டாவுடன் 3 பேர் கைது

திருவிடைமருதூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ஐந்து தலைப்பு வாய்க்கால் மெயின் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற காரை சோதனை செய்தபோது, அரசு உரிமம் பெறாத நாட்டு துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது.காரில் இருந்த காரைக்கால் மாவட்டம் ஊழியபத்து கிராமத்தை சேர்ந்த பாலகுரு (50), மயிலாடுதுறை எட்வின் லியோ (36), காரைக்கால் மாவட்டம் நிரவி கார் டிரைவர் அப்துல்காதர் (36) ஆகிய 3 பேரை கைது செய்து, துப்பாக்கி, 150 தோட்டாக்கள், அரை கிலோ ரசாயன பவுடர் மற்றும் ஐந்து மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

The post நாட்டுத்துப்பாக்கி 150 தோட்டாவுடன் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvidaimarudur ,Thiruvidaimarudur ,Kumbakonam ,Thanjavur ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் அருகே பரபரப்பு: கிராமத்திற்குள் வந்த முதலை