- வணிகர் சங்ககால மாநாடு
- ஈரோட்
- Wickramaraja
- ஈரோட், சென்னை
- பங்காரப்பேட்டை சோயலையப்பன் தெரு
- ஈரோட்டில் வணிகர்கள் சங்க மாநாடு
சென்னை: ஈரோட்டில் மே 5ம் தேதி வணிகர் சங்கங்களின் மாநாடு நடக்கிறது என்று விக்கிரமராஜா கூறினார்.வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் நேற்று நடந்த கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு கடையை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மே 5 வணிகர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் பல லட்சம் வணிகர்கள் கலந்துகொள்ளும் மாநாடு நடைபெறுகிறது.
இதில் கிழக்கு மாவட்ட வணிகர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்துள்ள 12 மணி நேர வேலை என்பது வரவேற்கத்தக்கது. தற்போது அதனை தமிழக முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார். தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து அவர் மீண்டும் அறிவிப்பார். அதேபோல் பொது இடங்கள், திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்தலாம் என்ற சட்டம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை கொண்டு வந்தால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு போராட்டம் நடத்தும் என்று கூறினார்.
The post மே 5ல் ஈரோட்டில் வணிகர் சங்க மாநாடு: விக்கிரமராஜா பேட்டி appeared first on Dinakaran.