பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ்3 எம்40 ஐ என்ற காரை சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்தக் கார் வரும் மே மாதம் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கி விட்டதாக இந்த நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. ரூ.5 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தக் காரில் 3.0 லிட்டர் , 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது.
இது அதிகபட்சமாக 335 பிஎச்பி பவரையும் 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 4.9 நொடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும். அதிகபட்சமாக 250 கி.மீ வேகம் வரை செல்லும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
The post பிஎம்டபிள்யூ நிறுவனம் சமீபத்தில் அறிவித்த எக்ஸ்3 எம்40 ஐ காரின் முன்பதிவு தொடக்கம்..!! appeared first on Dinakaran.