×

வெட்டிக்கொல்லப்பட்ட முறப்பநாடு வி.ஏ.ஒ. லூர்து பிரான்சிஸ் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம்..!!

தூத்துக்குடி: நேற்று கொல்லப்பட்ட முறப்பநாடு வி.ஏ.ஒ. லூர்து பிரான்சிஸ் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. முறப்பநாடு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி கிராமத்தில் விஏஓ-வாக பணிபுரிந்து வந்தவர் விஏஓ லூர்து பிரான்சிஸ். இவர் பணியில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸின் உடல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் செல்வமுருகன் தலைமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடலை பெற்றுக்கொண்ட அவரது உறவினர்கள் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள கல்லறை தோட்டத்தில் வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் உடலை அடக்கம் செய்தனர். அதேநேரத்தில் கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வெட்டிக்கொல்லப்பட்ட முறப்பநாடு வி.ஏ.ஒ. லூர்து பிரான்சிஸ் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Formapnadu ,O.O. ,Lourde Francis ,Thoothukudi ,Thuthukudi ,PA ,Tharapnadu Revenue ,Manapnadu ,
× RELATED காரைக்கால் ஓ.என்.ஜி.சி சார்பில் அரசு...