×

தட்டி கொடுத்த சித்தராமையா –அரவணைத்த பசவராஜ் பொம்மை: சூடு பறக்கும் தேர்தல் பரபரப்புகளுக்கு இடையே கூல் சந்திப்பு..!

பெங்களூரு: பெலகாவி விமான நிலையத்தில் திடீரென சந்தித்துக்கொண்ட பசவராஜ் பொம்மையும், சித்தராமையாவும் தோளில் அடித்து சிரித்து பேசிக்கொண்டது பாஜக, காங்கிரஸ் தொண்டர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் களத்தில் உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்கவைக்க பிரதமர் மோடி பலமுறை கர்நாடக மாநிலத்திற்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார். அமித்ஷாவும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதே போல் காங்கிரஸ் கட்சி சார்பாகவும் தீவிரமாக பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக விமானத்தில் செல்வதற்காக பெலகாவி விமான நிலையம் வந்த கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும், முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான சித்தாராமையாவும் விமான நிலையத்தில் திடீரென சந்தித்து பேசிக் கொண்டனர். அப்போது தேர்தல் வெற்றிக்காக இருவரும் மாறி மாறி வாழ்த்து தெரிவித்தனர். இது பாஜக, காங்கிரஸ் தொண்டர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தட்டி கொடுத்த சித்தராமையா – அரவணைத்த பசவராஜ் பொம்மை: சூடு பறக்கும் தேர்தல் பரபரப்புகளுக்கு இடையே கூல் சந்திப்பு..! appeared first on Dinakaran.

Tags : Siddaramaiah ,Basavaraj ,Bengaluru ,Basavaraj doll ,Belagavi airport ,BJP ,Congress ,
× RELATED `சக்தி திட்டத்தால் தான் நான் சட்டம்...