×

பாலியல் தொல்லை கொடுத்த ராப்பிடோ ஓட்டுநர்: போலீசார் தீவிர விசாரணை

கர்நாடக: பெங்களூரு இந்திரா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 30 வயது பெண் ஒருவர், கடந்த 21ம் தேதி தொட்டபல்லாபுராவில் உள்ள தனது வீட்டிற்குச் செல்ல ராப்பிடோவில் பதிவு செய்தார். அதன்படி வந்த ஓட்டுநர் தீபக்ராவ், ஓடிபி வேண்டும் என்று கூறி அந்த பெண்ணின் செல்போனை வாங்கிக் கொண்டு, பயணத்தின் போது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வீட்டிற்கு செல்லாமல் வேறு வழியாக சென்றதால் வாகனத்தை நிறுத்தும்படி அந்தப் பெண் கூறியுள்ளார்.

எனினும் பைக் வேகத்தை தீபக்ராவ் அதிகரித்ததால், ஓடும் வாகனத்தில் இருந்து அந்தப் பெண் கீழே குதித்துள்ளார். இதில் அந்தப் பெண் காயமடைந்த நிலையில், தீபக்ராவ் அங்கிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ராப்பிடோ ஓட்டுநரை தேடி வருகின்றனர் இந்நிலையில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post பாலியல் தொல்லை கொடுத்த ராப்பிடோ ஓட்டுநர்: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Rapido ,Karnataka ,Indira Nagar, Bengaluru ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி