×

ஈபிள் டவர் அளவு உயரமுள்ள ராட்சத விண்கல், பூமியை இன்று கடந்து செல்ல உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தகவல்!!

சென்னை : 1007 அடி உயரமுள்ள ராட்சத விண்கல், பூமியை இன்று கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. விண்வெளியில் ஏராளமான பிரமாண்ட விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவை பூமியின் மீது மோதி பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய அபாயங்கள் அதிகமாக உள்ளன. சமீபத்தில் கூட, சில பிரமாண்ட விண்கற்கள் பூமிக்கு நெருக்கமாக வந்து சென்றன. இந்த நிலையில் ராட்சத விண்கல், பூமியை இன்று கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

ஈபிள் டவர் அளவு உயரமுள்ள 2006 HV5 என்ற விண்கல் பூமியை கடக்கவுள்ளதாக கூறிய நாசா, சுமார் 1007 அடி உயரமுள்ள இந்த விண்கல் பூமியை 10 லட்சம் கிமீ தொலைவில் மணிக்கு 62,723 கி.மீ வேகத்தில் கடக்கும் என தெரிவித்துள்ளது. இந்த விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்து இல்லை என்றும், எனினும் விண்கற்களின் அசைவுகள் கவனிக்கப்பட்டு வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.இதனிடையே நேற்று பூமியை 4 விண்கற்கள் கடந்துள்ளதாக நாசா கூறியுள்ளது. அதில் 2023 HW, 2023 HL2 என்ற விண்கற்கள் 90 அடி அளவு கொண்டன. மற்ற இரண்டு விண்கற்கள் 2023 GO1 ,2023 HH3 சிறிய அளவை கொண்டன.

 

The post ஈபிள் டவர் அளவு உயரமுள்ள ராட்சத விண்கல், பூமியை இன்று கடந்து செல்ல உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தகவல்!! appeared first on Dinakaran.

Tags : NASA ,Eiffel Tower ,earth ,Chennai ,
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்