×

தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது: போலீசார் தொடர்ந்து விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று கொல்லப்பட்ட முறப்பநாடு வி.ஏ.ஒ. லூர்து பிரான்சிஸின் உடல் பிரேத பரிசோதளை தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம்,வல்லநாடு அருகே முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பணியாற்றியவர் லூர்து பிரான்சிஸ் (56). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தாமிரபரணி ஆற்றில் இருந்து கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு டூவீலரில் மணலை கடத்தியதை பார்த்த விஏஓ லூர்து பிரான்சிஸ், முறப்பநாடு போலீசில் கடந்த 13ம் தேதி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார்.

அப்போது உள்ளே வந்த இருவர், அரிவாளால் லூர்து பிரான்சிசை சரமாரியாக வெட்டினர். அவர்களில் ஒருவர் என் மீது எப்படி காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்பாய் எனக் கேட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார். தகவலறிந்து முறப்பநாடு போலீசார் வந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த விஏஓவை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர். இதனிடையே சிகிச்சை பலனின்றி விஏஓ லூர்து பிரான்சிஸ் இறந்தார். இதையடுத்து ராமசுப்புவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மற்றொரு நபரான மாரிமுத்துவை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸை கொன்றதாக கூறப்படும் மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளர். தலைமறைவாக இருந்த மரிமுத்துவை கைது செய்துள்ளது 4 தனிப்படை போலீசார். இந்த கொலை வழக்கு சம்மந்தமாக ராமசுப்பு என்பவரை உடனடியாக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான மாரிமுத்து என்பவர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார், தற்போது இவர் நெல்லை அருகே மாரிமுத்து பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இந்த ரகசிய தகவல் அடிப்படையில் உடனடியக விரைந்து சென்ற தனிப்படை போலீசார் நெல்லை அருகே பதுங்கி இருந்த மாரிமுத்துவை தற்போது கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த கொலை சம்மந்தமாக தற்போது பிடிக்கப்பட்டுள்ள மாரிமுத்து என்ற குற்றவாளியிடம் தொடர்ந்து தனிப்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இவர் அந்த பகுதியில் மணல் திருட்டில் எடுப்படுவதாகவும், இந்த மணல் திருட்டு சம்மதமாக அடிக்கடி கிராம நிருவாக அலுவலரான லூர்து பிரான்சிஸை பலமுறை மாரிமுத்து சத்தம் போட்டதாகவும், மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனகத்தில் மணல் திருடி எடுத்து செல்லும் போது அவரை தடுத்து நிறுத்தி உயிரிழந்த கிராம நிருவாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் தடுத்து நிறுத்து மாரிமுத்துவை கண்டித்தாகவும் கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக தான் நேற்று லூர்து பிரான்சிஸை அலுவலகத்தில் வைத்து கொடுரமாக வெட்டி கொன்றதாக முதல்கட்ட விசாரணையில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

The post தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது: போலீசார் தொடர்ந்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tuticorin VAO ,Tuticorin ,Murappanadu VAO ,Lourdes ,Francis' ,Thoothukudi district ,Vallanadu ,Thoothukudi V.A.O. ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...