×

கல்வி ஊக்கத் தொகை கேட்டு மாணவர்கள் தர்ணா போராட்டம்

 

திருச்சி, ஏப்.26: கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படாததால் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் கல்லூரி வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி பெரியார் ஈவேரா அரசு கலைக் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு மற்றும் இதர மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும். ஆனால் அகாடமிக் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையிலும் விரைவில்

தேர்வு நடைபெற உள்ள சூழலிலும், இதுவரை மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படாததால் நேற்று காலை விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் கல்லூரி வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்திலும் பலமுறை மனு அளித்தும் இதுவரை கல்வி ஊக்கத்தொகை தொகை வழங்கப்படாததால் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுனர். தகவல் அறிந்த கேகேநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்ைத நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

The post கல்வி ஊக்கத் தொகை கேட்டு மாணவர்கள் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Tags : dharna ,Trichy ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...