×

திருவையாறு அருகே லாரி மோதி முதியவர் பலி

 

திருவையாறு.ஏப்.26: திருவையாறு அடுத்த விளாங்குடி மெயின்ரோட்டை சோ;ந்த வெங்கடாசலம்(94) இவர் நேற்று முன்தினம் விளாங்குடி கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். விளாங்குடி பஸ்ஸடாப் அருகே வரும்போது தஞ்சையிலிருந்து திருமானூர் நோக்கி வந்த லாரி வெங்கடாசலம் மீது மோதியது. இதில் வெங்கடாசலத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனா்.

சிகிச்சை பலனளிக்காமல் வெங்கடாசலம் நேற்று இறந்தார். இது குறித்து வெங்கடாசலம் மகன் ரவிச்சந்திரன்(52) திருவையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருவையாறு போலீசார் அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த கோவிலூரை சோ்ந்த லாரி டிரைவா் தமிழ்செல்வன்(33) என்பவா் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

The post திருவையாறு அருகே லாரி மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvaiyaru ,Venkatachalam ,Vilangudi ,Kollidam river ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா