×

நாகூர் தர்காவில் காணாமல் போன குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைப்பு

 

நாகப்பட்டினம்,ஏப்.26: நாகூர் தர்காவில் காணாமல் போன குழந்தை கண்டிபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த தர்கா காவலாளிகளுக்கு பக்தர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். நோன்பு பெருநாளை முன்னிட்டு நாகூர் தர்காவில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நாகூர் தர்காவிற்கு கர்நாடாக மாநிலம் பெங்களுரை சார்ந்த முகம்மதுமக்சூத் தனது குடும்பத்துடன் நாகூர் தர்காவிற்கு நேற்று வருகை தந்தார். இரவது மனைவி நாகூர் தர்காவின் கூட்ட நெரிசலில் தனது குழந்தையை தொலைத்துவிட்டார். பெற்றோர் குழந்தையை பல இடங்களில் தேடினர்.

இந்நிலையில் குழந்தை தனியாக இருப்பதை கண்ட நாகூர் தர்கா காவலாளி அய்யப்பன் தனியாக நின்ற குழந்தையை அழைத்து வந்து நாகூர் தர்கா அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து நாகூர் தர்கா அலுவலகத்தில் இருந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆறு மணி நேர தொடர் முயற்சிக்கு பின்னர் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கபட்டது. இதையடுத்து குழந்தையை ஒப்படைத்த காவலாளி, நாகூர் தர்கா நிர்வாகம் ஆகியோருக்கு முகம்மதுமக்சூத் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

The post நாகூர் தர்காவில் காணாமல் போன குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Nagur Dargah ,Nagapattinam ,Dharga ,Nagur Dharga ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்...