×

குத்தாலம் பகுதியில் மின்விநியோகம் நாளை நிறுத்தம்

 

மயிலாடுதுறை,ஏப்.26: பாலையூர், மேக்கிரிமங்கலம், குத்தாலம், துணை மின் நிலையத்தில் நாளை (27ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பாலையூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகள் பாலையூர், தேரழந்தூர் கோமல், மருத்தூர், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் மேக்கிரிமங்கலம், பழையகூடலூர், கொக்கூர், பேராவூர், கரைகண்டம், கருப்பூர், திருவாலங்காடு, திருவாவடுதுறை மற்றும் குத்தாலம் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும். பகுதிகள் குத்தாலம் டவுன், குத்தாலம் தேரடி, மாதிரிமங்கலம், சேத்திரபாலபுரம், அரையபுரம், தொழுதாலங்குடி ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற் பொறியாளர் தெரிவித்தார்.

The post குத்தாலம் பகுதியில் மின்விநியோகம் நாளை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Kutthalam ,Mayiladuthurai ,Balayur, Makirimangalam, Guthalam ,Guthalam ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...