×

உடுமலை அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கொள்ளை

 

உடுமலை, ஏப்.26: உடுமலை எலையமுத்தூர் சாலையில் தனியார் பார்சல் டெலிவரி நிறுவன அலுவலகம் உள்ளது. பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் பொருட்களை விநியோகிக்கும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இந்நிறுவனத்தில் மேலாளராக பாலாஜி என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அலுவலகத்தில் அமர்ந்து வரவு செலவு கணக்குகளை பார்த்து முடித்து விட்டு நள்ளிரவு 12.30 மணி அளவில் அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை 7 மணியளவில் அலுவலகத்துக்கு வந்துள்ளார்.

அப்போது அலுவலக கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அலுவலகத்தில் இருப்பு வைத்திருந்த வசூல் பணம் ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் கொள்ளையர் உருவம் பதிவாகியிருக்கும் என்பதால், காட்சிகள் பதிவாகியிருந்த டிவிஆரையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றிருந்தனர். இதுகுறித்து உடுமலை காவல் நிலையத்துக்கு பாலாஜி அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்றனர். மேலும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post உடுமலை அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Eliyamuthur Road, Udumalai ,Dinakaran ,
× RELATED உடுமலை நகராட்சி கூட்டத்தில் உபரி பட்ஜெட் தாக்கல்