
- ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர் நல வாரிய அலுவலகம்
- Alankulam
- ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர் நல வாரியம்
- முகூதல்-கடையாம் சாலை
- ராம்நகர்
- காங்கிரஸ்
- ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர் நல வாரியம்
- தின மலர்
ஆலங்குளம்,ஏப்.26: ஆலங்குளம் அருகே ராம்நகரில் முக்கூடல்-கடையம் ரோட்டில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு காங்கிரஸ் கட்சியின் பாப்பாக்குடி வட்டார தலைவர் அரிநாராயணன் தலைமை வகித்தார். முன்னாள் துணை சேர்மன் கோவில் பிள்ளை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரி, கிளை தலைவர்கள் கொடிராஜ், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய மாநில செயற்குழு உறுப்பினர் மல்லீஸ்வரன் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்பி ராமசுப்பு கலந்துகொண்டு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை திறந்துவைத்து பேசினார். விழாவில் முருகன், மாரியப்பன், சோனியா பேரவை தினகரன், ஜெயபால், மணிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய மாவட்ட தலைவர் தங்கராஜ் செய்திருந்தார்.
The post ஆலங்குளம் அருகே அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய அலுவலகம் திறப்பு விழா appeared first on Dinakaran.