×

ஆசிட் குடித்த பெண் பலி

வேளச்சேரி: நன்மங்கலம் அம்பேத்கர் சாலை பகுதியை சேர்ந்தவர் சுசீலா (58). இவர் தனது மகன்களான பிரபு, கார்த்திக் ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்களுக்குள் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் சுசீலா மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்ற இவர், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சசீலா நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். தகவலறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

The post ஆசிட் குடித்த பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Sushila ,Nanmangalam Ambedkar Road ,Prabhu ,Karthik ,Dinakaran ,
× RELATED வலிப்பு ஏற்பட்டு இளம் பெண் சாவு