ஆவடி: ஆவடி மாநகராட்சி உட்பட்ட சொத்து வரி செலுத்தும் வீடுகளுக்கு, க்யூ ஆர் கோடு என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வீட்டிலிருந்தபடியே புகார் இனி புகார்களை தெரிவிக்கலாம். ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இங்கு, 5 லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. சென்னை மாநகரினை ஒட்டியுள்ள, இந்த ஆவடி மாநகராட்சியானது, மாநகரின் அனைத்து அம்சங்களையும் கொண்டது. மேலும், நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.
மாநகராட்சியின் சேவையினை உடனுக்குடன், தங்குதடையின்றிபெற மற்றும் சேவைகளில் உள்ள குறைபாடுகள் குறித்தும் புகார் அளிக்க, புதிய திட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. அதற்கு ஏதுவாக, அரசாங்கம், ‘மக்கள் சேவையில் மாநகராட்சி நமது சேவையில் நகராட்சி’ என்ற நோக்கத்தில் உருவாக்கியுள்ளது. தற்போது, வளர்ந்துள்ள தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, பலன் பெரும் வகையில் க்யூ ஆர் கோடு கார்டு என்ற இந்த புதிய திட்டத்தினை, அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த க்யூ ஆர் கோடு ஒவ்வொரு வீட்டிலும் ஒட்டப்படும். அதுவும், சொத்து வரி செலுத்தும் வீடுகளுக்கு மட்டுமே க்யூ ஆர் கோடு ஒட்டப்பட்டு, அவர்களின் கைபேசி எண்ணிற்கு பதிவு செய்து பின்னர், பின் நம்பர் மற்றும் பாஸ்வோர்டு நம்பர் பதிவு செய்து வழங்கப்படும்.
இதில், க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்வது குறித்தும், புகார் செய்வது எப்படி? சேவை பெறுவது எப்படி? என்பது குறித்த பயிற்சிகள் வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். ஆண்டிராய்டு போன் மூலம் இந்த அட்டையை ஸ்கேன் செய்தால், இதர விபரங்கள் லிங்க் மூலம் கிடைக்கும். நமக்கு தேவையான சேவைகளை இதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஆவடி மாநகராட்சி வார்டு எண் 39 காமராஜ் நகரில் இத்திட்டம் முதன் முறையாக சொத்து வரி செலுத்தும் வீடுகளில் க்யூ ஆர் கோடு ஒட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 1,636 வீடுகள் இங்கு உள்ளன. இதுவரை 1,520 வீடுகளுக்கு இந்த க்யூ ஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்
தக்கது.
The post ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்து வரி செலுத்தும் வீடுகளுக்கு க்யூ ஆர் கோடு: வீட்டிலிருந்தபடியே புகார் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.