×

புல்வாமா தாக்குதல் பற்றி பதவி விலகிய பிறகு கேள்வி எழுப்பவில்லை: அமித்ஷாவுக்கு சத்யபால் மாலிக் பதில்

ஜெய்ப்பூர்: ‘பதவி விலகிய பிறகுதான் புல்வாமா தாக்குதல் பற்றி கேள்வி எழுப்புகிறேன் என்று சொல்வது தவறு’ என முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறி உள்ளார். காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்து குறித்து அப்போது காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், இந்த விஷயத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்ததாக குற்றம்சாட்டினார். இது கடும் சர்ச்சையானது. ‘ஆளுநர் பதவியில் இருக்கும் போது எதுவும் சொல்லாமல், இப்போது குற்றம்சாட்டுகிறார்’ என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். இது குறித்து ராஜஸ்தானின் சிகாரில் பேட்டி அளித்த சத்யபால் மாலிக், ‘‘நான் ஆளுநர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு இப்பிரச்னையை எழுப்புவதாக கூறுவது தவறானது. தாக்குதல் நடந்த அன்றே இதைப் பற்றி பேசியிருக்கிறேன். ’’ என்றார்.

The post புல்வாமா தாக்குதல் பற்றி பதவி விலகிய பிறகு கேள்வி எழுப்பவில்லை: அமித்ஷாவுக்கு சத்யபால் மாலிக் பதில் appeared first on Dinakaran.

Tags : Pulwama ,Satya Pal Malik ,Amit Shah ,Jaipur ,Pulwama attack ,Dinakaran ,
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!