×

மல்யுத்த வீரர்கள் போராட்ட விவகாரம்: இந்திய ஒலிம்பிக் சங்கம் அவசர கூட்டம்.! நாளை மறுநாள் நடக்கிறது

புதுடெல்லி: பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் மீதான பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரை கைது செய்யக் கோரி மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாக கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா வெளியிட்ட அறிவிப்பில், ‘ஒன்றிய அரசிடம் இருந்து வந்துள்ள கடிதத்தின் அடிப்படையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அவசர கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெறும். வரும் மே 7ம் தேதி திட்டமிட்டப்படி கூட்டமைப்பின் தேர்தல் நடைபெறும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் தற்போது நிலவும் பிரச்னைகள் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க கூட்டத்தில் விவாதிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

The post மல்யுத்த வீரர்கள் போராட்ட விவகாரம்: இந்திய ஒலிம்பிக் சங்கம் அவசர கூட்டம்.! நாளை மறுநாள் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Wrestlers ,Indian Olympic Association ,New Delhi ,Brij Bushan ,Indian Wrestling Society ,Bajaka ,Wrestlers Fight ,Dinakaran ,
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...