×

சில்வர் கிளவுட் தோட்ட தொழிலாளர் கமிட்டி கூட்டம் தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை விரைவாக வழங்க வேண்டும்

கூடலூர் : சில்வர் கிளவுட் தோட்ட தொழிலாளர் கமிட்டி கூட்டம் கமிட்டி தலைவர் உசேன் தலைமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட பொதுசெயலாளர் போஜராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர் முஹம்மது கனி, பொருளாளர் ராஜூ மற்றும் தோட்டக்கமிட்டி தலைவர்கள் முகம்மது, ரவி, சித்ராஜ், உண்ணி, பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட அனைத்தையும் விரைவாக வழங்க வேண்டும்.

சில்வர் கிளவுட் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் குறித்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாத காரணத்தினால் கலெக்டரை நேரில் சந்தித்து ஆலோசனை கேட்பது. தீர்வுகாண விட்டால் தொடர் போராட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post சில்வர் கிளவுட் தோட்ட தொழிலாளர் கமிட்டி கூட்டம் தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை விரைவாக வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Silver Cloud Plantation Labor Committee ,Kudalur ,Usain ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்