×

பழைய பென்சன் திட்டம் அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு

 

கும்பகோணம், ஏப்.25: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிழக்கு மண்டலம் மற்றும் வட மத்திய மண்டல இயக்க பொறுப்பாளர்களுக்கான இயக்க பயிலரங்கம் மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார். தஞ்சை மாவட்ட செயலாளர் மதியழகன் வரவேற்றார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழக மாநில தலைவர் ரவிச்சந்திரன் தொடக்க உரையாற்றினார்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில், முன்னாள் வட்டார கல்வி அலுவலர் மனோகரன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் மகாலட்சுமி, அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிறிஸ்துராஜ், அகில இந்திய துணைத்தலைவர் சாமிநாதன், மாநில பொறுப்பாளர் மத்தேயு, நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சித்ரா, மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணதாசன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ஜீவன்ராஜ், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து பல்வேறு தலைப்புகளில் பேசினர். முடிவில் தஞ்சை மாவட்ட தலைவர் கலைச்செல்வன் நன்றி கூறினார். பின்னர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் தெரிவித்ததாவது:

தொழிலாளர்களுக்கு விரோதமாக கொண்டு வந்துள்ள தொழிற்சாலை சட்ட திருத்தத்தை உடனே திரும்ப பெற வேண்டும், திமுக அரசு கடந்த சட்டமன்ற தேர்தலில் போது வழங்கிய வாக்குறுதிகள் குறித்து நடைபெற்ற சட்டப்பேரவையில் எந்த விதமான அறிவிப்பும் இல்லாததால் தமிழ்நாட்டிலுள்ள அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டத்தை மேற்கொள்ள ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூடி முடிவு செய்ய உள்ளனர் என்றார்.

The post பழைய பென்சன் திட்டம் அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Jacto Jio ,Benson ,Kumbakonam ,Thanjavur District ,Babanasam ,Tamil Nadu ,Primary School Teachers' Alliance ,East Zone ,North Central ,Dinakaran ,
× RELATED ஜாக்டோ-ஜியோ கோரிக்கை ஆசிரியர், அரசு...