×

வைகை அணையில் மீன்பிடிப்பது தொடர்பாக இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை

 

ஆண்டிபட்டி, ஏப். 25: ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் மீனவர்கள் பழைய முறைப்படி மீன்பிடி நடத்த வேண்டும் என்று கூறி நடைபெற்று வரும் மீன்பிடி நிறுத்தம் தொடர்பாக இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்த்தேக்கத்தில் 65 ஆண்டுகளாக அரசு நடத்தி வந்த மீன்பிடி உரிமை கடந்த மாதம் தனியாருக்கு விடப்பட்டது.

இந்த மீன்பிடியில் பழைய நடைமுறைபடி மீனவர்களுக்கு பிடிக்கப்படும் மீன்களில் சரி பங்கு கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி மீனவர்கள் வைகை அணைத் தண்ணீரில் இறங்கி போராட்டம் நடத்தினர். முதற்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் இதுதொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) தாலுகா அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மீனவர்கள் தொடர்ந்து நேற்று 5வது நாளாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றனர்.

The post வைகை அணையில் மீன்பிடிப்பது தொடர்பாக இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Waikai Dam ,Antipatti ,Vaigai Dam ,Andipatti ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்