மானாமதுரை, ஏப்.25: மானாமதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் சர்வதேச புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பை நேசிப்போம் நிகழ்ச்சி நடைபெற்றது. குறிச்சி கிளை நூலகர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் நூலகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான புத்தகங்கள் கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் விரும்பிய புத்தகங்களை எடுத்து வாசித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் வாசித்தலுக்கும்,படித்தலுக்கும் உள்ள வேறுபாட்டை கூறி ஆழ்ந்து படிக்கும் முறையை எடுத்து கூறினார். பின்னர் மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களில் உள்ள சிறப்புகளை எடுத்து கூறினார்கள். சிறப்பாக மதிப்புரை கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மானாமதுரை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் குலாலர் தெருவில் உள்ள பொது கட்டிடத்தில் சர்வதேச புத்தக தின விழா நடந்தது. கிளை தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ரசீந்திரகுமார் வரவேற்றார். விழாவில் ஓய்வு பெற்ற துணை தலைமை ஆசிரியர் முத்துராமலிங்கம், ஓய்வு பெற்ற நீதித்துறை அலுவலர் அமல்ராஜ், ஓய்வுபெற்ற தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலர் இளங்கோவன், மாவட்ட பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்த மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். உறுப்பினர் பாரதிசத்யா நன்றி கூறினார்.
The post சர்வதேச புத்தக தின விழாவில் மாணவ,மாணவிகளுக்கு பரிசு appeared first on Dinakaran.