ஏதென்ஸ்: கிரேக்க நாட்டிலுள்ள கிரீட் தீவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. கிரீட் தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் வெளியேறினர். இதில் ஒருவர் உயிரிழந்ததாக தெரியவருகிறது. நேற்று காலை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சில நமிடங்களில் மீண்டும் 4.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஏதென்ஸில் உள்ள ஜியோடைனமிக் நிறுவனம் கூறியுள்ளது. இந்த நில நடுக்கம் கிரீட் தீவு முழுவதும் உணரப்பட்டுள்ளது….
The post கிரீட் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.