×

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி 2பேர் பலி

ஈரோடு: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி திருவள்ளுவர் வீதியை சேர்ந்த ஜெய்லானி மகன் முகமது ரிஸ்வான் (20). அதேபகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் மகன் முகமது ஜூபைர் (22). இவர், சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இருவரும் ரம்ஜான் பண்டிகை விடுமுறைக்கு ஊருக்கு வந்தனர். நேற்று முன்தினம் மதியம் முகமது ரிஸ்வான், இவரது அண்ணன் முகமது தமிமுன் அன்சாரி (23), அபுபக்கர் சித்திக், முகமது ரியாஸ், முகமது ஆகிய 5 பேர் ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே பெத்தாம்பாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் குளித்துகொண்டிருந்தனர். அப்போது முகமது ரிஸ்வானும், முகமது ஜூபைரும் நீரில் மூழ்கி பலியாகினர்.

The post கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி 2பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Kilpawani canal ,Erode ,Mohammad Rizwan ,Jailani ,Oothukuli Thiruvalluvar road, Tirupur district ,Shaja Khan ,Kilbhavani canal ,
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்