×

பெண் சடலம் ஏரியில் மீட்பு

ஆவடி: ஆவடி தனலெட்சுமி நகர் 8வது தெருவை சேர்ந்தவர் பன்னீர்தாஸ் (64). இவரது மனைவி சசிகலா (53). கடந்த மாதம் 22ம் தேதி இரவு முதல் சசிகலா வீட்டில் இருந்து மாயமானார். இதனையடுத்து உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவறைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பன்னீர்தாஸ், ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிந்து சசிகலாவை தேடினர்.இந்நிலையில், நேற்று மதியம் சசிகலா கவரப்பாளையம் ஏரியில் சடலமாக மிதந்து கொண்டிருந்தார். தகவலறிந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஏரியில் இறங்கி சடலத்தை வீரர்கள் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். …

The post பெண் சடலம் ஏரியில் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Avadi ,Panneerdas ,8th Street, Thanaletsumi Nagar, Avadi ,Sasikala ,
× RELATED வாகன ஓட்டிகள் அவதி மொபட்டில் இருந்து விழுந்து வாட்ச்மேன் உயிரிழப்பு