×

போதையில் கார் முன்பு விழுந்து ரகளை தட்டிக்கேட்டவர்கள் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்: 3 பேர் கைது

பூந்தமல்லி: சேலையூரில் கார் முன்பு விழுந்து ரகளையில் ஈடுபட்டு, காரில் வந்தவர்களை பீர்பாட்டிலால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலையூர் அடுத்த வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (23). சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், தனது நண்பர்களான சந்தோஷ் (21), ராகுல் (21), சாரா (21) ஆகியோருடன், நேற்று முன்தினம் இரவு சேலையூர் அகரம் தென் பிரதான சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.அங்குள்ள தனியார் பல்கலைக்கழகம் அருகே வந்தபோது, போதையில் 3 பேர் காரின் முன்பு விழுவது போல் வந்துள்ளனர். இதனால், அதிர்ச்சிடைந்த பிரேம்குமார், காரை நிறுத்திவிட்டு, அவர்களை தட்டி கேட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள், பிரேம்குமார் மற்றும் அவரது நண்பர்களை பீர் பாட்டில்களை கொண்டு சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலத்த காயமடைந்த பிரேம்குமார், சந்தோஷ், ராகுல், சாரா ஆகிய 4 பேரை மீட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் இச்சம்பவம் வழக்குப்பதிவு செய்து, குடிபோதையில் காரை வழிமறித்து ரகளை ஈடுபட்டு தாக்குதல் நடத்திய திருவஞ்சேரி பகுதியை சேர்ந்த கார்த்திக் (38), ஜெயக்குமார் (48), அரவிந்த்குமார் (35) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போதையில் கார் முன்பு விழுந்து ரகளை தட்டிக்கேட்டவர்கள் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Poonthamalli ,Salayur ,Pirbat ,Dinakaran ,
× RELATED போனில் மனைவியுடன் தகராறு: கணவன் தூக்கிட்டு தற்கொலை