×

யங் இந்தியா போல் என்ற சிறந்த பேச்சாளர் நேர்காணல் நிகழ்ச்சிக்கான 3-வது சீசன் இலட்சினையுடன் கூடிய விளம்பர அட்டை: லெனின் பிரசாத், சிராக் சிங் பர்மர் வெளியீடு

சென்னை: யங் இந்தியா போல் என்ற சிறந்த பேச்சாளர் நேர்காணல் நிகழ்ச்சிக்கான மூன்றாவது சீசன் இலட்சினையுடன் கூடிய விளம்பர அட்டையை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் மற்றும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சிராக் சிங் பர்மர் நேற்று வெளியிட்டனர். சென்னை, சத்தியமூர்த்தி பவனில் ‘யங் இந்தியாபோல்’’ என்ற நேர்காணல் நிகழ்ச்சிக்கான தொடக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் மற்றும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சிராக் சிங் பர்மர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொது செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் பேசினார். மேலும், இந்திய இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சிராக் சிங் பர்மர் பேசியதாவது: ‘‘யங் இந்தியா போல்’’ சீசன் 3ல் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. இது ராகுல் காந்தியின் மிகப்பெரிய கனவு நிகழ்ச்சியாகும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேச்சாளராக பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் இளைஞர்கள் நாட்டின் பிரச்னைகள் மக்கள் குரலாக பேச முடியும். மாவட்ட அளவில் மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் என மூன்று பகுதிகளாக இந்த நிகழ்ச்சி நடைபெறும். மாவட்ட அளவில் மட்டும் ஆன்லைன் மூலம் நடைபெறும், மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் நேரடியாக நடைபெற இருக்கிறது. மே 10ம் தேதியுடன் இதற்கான முன்பதிவு முடிவடைகிறது.

The post யங் இந்தியா போல் என்ற சிறந்த பேச்சாளர் நேர்காணல் நிகழ்ச்சிக்கான 3-வது சீசன் இலட்சினையுடன் கூடிய விளம்பர அட்டை: லெனின் பிரசாத், சிராக் சிங் பர்மர் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Lenin Prasad ,Sirak Singh Barmer ,Chennai ,Chirac Singh Burmer ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...