×

கோவளம் கடலில் குளித்தபோது விபரீதம் ராட்சத அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி

திருப்போரூர்: கோவளம் கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது, ராட்சத அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். திருவள்ளூர் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (55). இவரது மகன் ஸ்ரீசபரீஷ் (18). திருப்போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுகிழமை அவரது பள்ளி நண்பரின் சகோதரியின் திருமணம் ஞாயிற்றுகிழமை பட்டினப்பாக்கத்தில் நடந்தது. இத்திருமண நிகழ்ச்சியில் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்ததும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்துக்கு பைக்கில் சுற்றுலா சென்றனர்.

அப்போது, கோவளத்தில் உள்ள புளூ பீச் பகுதியில் ஸ்ரீசபரீஷ் உள்ளிட்ட 11 பேர் கடலில் இறங்கி குளித்துள்ளனர். திடீரென, ராட்சத அலையில் சிக்கி 5 பேர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் வந்த நண்பர்கள் கரையில் இருந்தவாறு கூச்சல் போட்டதையடுத்து பொதுமக்களும், மீனவர்களும் சேர்ந்து 3 பேரை மீட்டனர். மற்ற இருவர் கடல் அலையில் சிக்கி மாயமாகினர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 2 பேரின் சடலங்கள் கானத்தூர் அடுத்த கரிக்காட்டுக்குப்பம் பகுதியில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த கானத்தூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 2 கல்லூரி மாணவர்களின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post கோவளம் கடலில் குளித்தபோது விபரீதம் ராட்சத அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Vibritam Giant wave ,Kowalam ,Tirupporur ,Giant wave ,Vivitham Giant Wave ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ