×

மதுரை சித்திரை திருவிழாவின் 2ம் நாளான இன்று அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் 2ம் நாளான இன்று அன்ன வாகனத்தில் அம்மன், சுவாமி வீதி உலா வருகின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றதுடன் தொடங்கியது. 2ம் நாளான இன்று அம்மன் அன்ன வாகனத்திலும், சுவாமி பிரியாவிடை பூத வாகனத்திலும் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளானோர் பலந்து கொண்டு அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்வர்.

தொடர்ந்து 3ம் நாள் (ஏப்.25) இரவு கைலாச வாகனம், காமதேனு வாகனத்திலும் வீதி உலா வருகின்றனர். 4ம் நாள் (ஏப்.26) காலையில் அம்மன், சுவாமி தங்கப்பல்லக்கு வாகனத்தில் வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியில் எழுந்தருளுகின்றனர். 5ம் நாள் (ஏப்.27) இரவு தங்கக்குதிரை வாகனத்தில் வேடர் பறிலீலை, 6ம் நாள் (ஏப்.28) இரவு ரிஷப வாகனத்தில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, 7ம் நாள் (ஏப்.29) இரவு நந்திகேசுவரர், யாளி வாகனத்தில் வீதி உலா வருகின்றனர். 8ம் நாள் (ஏப்.30) இரவு 7.05 மணிக்கு மேல் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. 9ம் நாள் (மே 1) இரவு திக்விஜயம், 10ம் நாள் மே 2ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

அன்று மாலை யானை வாகனத்தில் பூப்பல்லக்கும் நடைபெறும். 11ம் நாள் (மே 3) திருத்தேர் மாலை சப்தாவர்ணத்தில் வீதி உலா, 12ம் நாள் (மே 4) தீர்த்தவாரி, தேவேந்திர பூஜை ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். அன்றுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் துணை கமிஷனர் அருணாச்சலம் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post மதுரை சித்திரை திருவிழாவின் 2ம் நாளான இன்று அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா appeared first on Dinakaran.

Tags : Madurai Chitrai Festival ,Amman Veedhi Ula ,Anna Vahanam ,Madurai ,Amman ,Swami ,Anna ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...