×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கொரோனா தொடர்ந்தபோது, கொரோனா விதிகளை மீறியதாக சாத்தான்குளத்தில் தந்தை, மகன் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் தந்தை, மகன் ஆகியோரை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திக்கப்பட்டு சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைத்த சிறுது நேரத்தில் தந்தை, மகன் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின்படி பல்வேறு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்கு சிபிஐ தரப்பில் விசாரணை செய்யப்பட்டு 2 குற்றப்பத்திரிக்கைகளை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 காவலர்களும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதில் சிறப்பு காவலர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 9 காவலர்களும் மதுரை மத்திய சிறையில் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி முக்கிய குற்றவாளியான ஸ்ரீதர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணையின்போது சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வாதங்களை வைத்தனர்.

இந்த வழக்கு தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகிறது, ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்கின்றனர், குறுக்கு விசாரணை கோரி மனுதாக்கல் செய்கின்றனர், ஒரு சாட்சியை விசாரிக்கவே ஒரு மாதத்திற்கும் மேலாகிறது எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் இவர்கள் ஜாமீனில் வெளியே சென்றால் சாட்சியங்களை கலைக்கக்கூடும் எனவும் கடந்த விசாரணையின்போது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனை பதிவு செய்த நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்புக்காக இன்று ஒத்திவைத்திருந்தார். சற்று முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்த வழக்கை 3 மாதத்தில் விசாரணை செய்து முடிக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

The post சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Maduraikil ,Satankulam ,Madurai ,High Court of Madurai District Court ,Dinakaran ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...