×

சென்னையில் செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

சென்னை: சென்னையில் செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது. 2015, 2020ம் ஆண்டுகளில் செட்டி நாடு குரூப்ஸ்-க்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக 2020ல் நடந்த சோதனையில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 2020ல் வருமான வரி சோதனையில் ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாடுகளில் ரூ.110 கோடிக்கு சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் செட்டிநாடு குழுமத்தின் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில்; செட்டிநாடு குழுமத்தத்துக்குச் சொந்தமான 6க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் எழும்பூர், அண்ணாசாலை ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை appeared first on Dinakaran.

Tags : Chettinad group ,Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...