×

வீட்டின் சுவர் இடிந்து அண்ணன், தங்கை பலி

சென்னை: வாலாஜாபாத் அடுத்த புத்தகரம் காலனியை சேர்ந்தவர் மணி (50), கூலி வேலை செய்து வருகிறார். இவர்  புத்தகரம் கால்நடை மருத்துவமனை அருகே, குடிசை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக வீட்டின் சுவர் வலுவிழந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மணி தனது 3 மகள்கள் மற்றும்  ஒரு மகனுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக,  வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து, அவர்கள் மீது விழுந்தது. இடிபாடுகளுக்கிடையே சிக்கி, மகன் பிரகாஷ் (30) சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மகள் துர்காதேவி (26) படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம்  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்….

The post வீட்டின் சுவர் இடிந்து அண்ணன், தங்கை பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ham ,Wallajabad ,Buddha ,Dinakaran ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...