×

பெரம்பலூர் மாவட்ட நூலகத்தில் உலக புத்தக தினவிழா

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தினவிழா நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு எம்எல்ஏ பிரபாகரன் பரிசுகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட மைய நூலக வளாகத்தில் நேற்று காலை தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை, பெரம்ப லூர் மாவட்ட மையநூலகம் மற்றும் பெரம்பலூர் வாசகர் வட்டம் இணைந்து நடத்திய உலகப் புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட நூலக அலு வலர்(பொ) சந்திரசேகரன் வரவேற்றார். பெரம்பலூர் வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் அகவி, வாசகர் வட்டத் துணைத்தலைவர் பே ராசிரியர் தமிழ்க்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவிற்கு பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் தலைமை தாங்கி, கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெ ற்றி பெற்ற மாணவர்களு க்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டி பேசினார். விழாவில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் கவிஞர் ராமர், சிதம்பரம் ராக வேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி ப் பேராசிரியை ஜெனிட்டா சௌந்தரி ரோச், பெரம்பலூர் தன்னம்பிக்கை பேச் சாளர் வைரமணி, பெரம் பலூர் மாவட்ட அரசு தேர்வு கள் உதவி இயக்குனர் கல் பனாத் ராய் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அரியலூர் அரசு கலைஅறி வியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தமிழ்மாறன், எழுத்தாளர் தாஹிர்பாஷா மற்றும் முன்னாள் வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் நூலக பொறுப்பாளர்கள், புரவலர்கள், வாசகர்கள் திர ளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மையநூலகர் (பொ) பாண்டியன் நன்றி கூறினார்.

The post பெரம்பலூர் மாவட்ட நூலகத்தில் உலக புத்தக தினவிழா appeared first on Dinakaran.

Tags : World Book Day ,Perambalur District Library ,Perambalur ,Perambalur District Central Library ,MLA ,Prabhakaran ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்