×

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் மே2ல் வருஷாபிஷேகம்

 

நெல்லை, ஏப். 24: பிரசித்திபெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா மே 2ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தென் மாவட்டங்களில் உள்ள பழமைவாய்ந்த சிவாலயங்களில் நெல்லை மாநகரில் அருள்பாலிக்கும் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயில் பாரம்பரியமிக்க ஒன்றாகும். சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் இந்தாண்டுக்கான வருஷாபிஷேகம் வரும் மே 2ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு அன்று காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கும்பம் வைத்து சுவாமி, அம்பாள், மூல மகாலிங்கம், விமான கலசங்கள் மற்றும் பரிவார மூர்த்தி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு, அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் சுவாமி மற்றும் அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் ரத வீதிகளில் வலம் வரும் வைபவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.

The post நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் மே2ல் வருஷாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Varushabhishekam ,Nellaipar Temple ,Nellai Town ,Nellie ,
× RELATED நெல்லையப்பர் கோயிலில் டிஎம்பி...