×

வரும் ஏப்.30ல் நடக்கிறது எம்.சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம்: அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை

 

மதுரை, ஏப்.24: வரும் ஏப்.30ல் எம்.சத்திரப்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு, ஏப்.25ல் முன்பதிவு செய்யலாம் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி விடுத்துள்ள அறிக்கை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட கழகம், மதுரை கிழக்கு சட்டமன்றத்தொகுதி சார்பில்எம்.சத்திரப்பட்டி கிராமத்தில் வரும் 30ம் தேதி பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

திறமையான மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. தமிழ்நாட்டின் அனைத்துப்பகுதிகளில் இருந்தும் திறமையான மாடுபிடி வீரர்கள் பங்கேற்றிட வரவேற்கப்படுகிறார்கள். அந்தவகையில் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு வரும் 25ம் தேதி மாலை 4 மணியளவில் மதுரை எம்.சத்திரப்பட்டி வாடிவாசல் முன்பு நடைபெற உள்ளது.சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் தாங்கள் முன்னதாக பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்,
வென்ற பரிசுகள் தொடர்பான சான்றிதழ்,ஆவணங்களுடன் முன்பதிவு இடத்திற்கு நேரடியாக வந்து கலந்து கொண்டு, முன்பதிவு செய்யலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post வரும் ஏப்.30ல் நடக்கிறது எம்.சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம்: அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : M. ,Chitrapatti Jallikat ,Minister B. Moothie ,Madurai ,Minister ,P.M. Moothi ,Moothi ,
× RELATED பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மஜத...