×

நங்கவரத்தில் புதிய காவல் நிலையம் திமுகவினர் எம்எல்ஏவுக்கு நேரில் நன்றி தெரிவிப்பு

குளித்தலை: நங்கவரத்தில் காவல் நிலையம் அமைப்பதற்கு, எம்எல்ஏ மாணிக்கத்தை நேரில் சந்தித்து திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த முதல்வர் டாக்டர் கருணாநிதி முதல் தொகுதியான குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை நங்கவரம் பகுதியில், புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பரிந்துரை படி, குளித்தலை சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான நங்கவரம் பகுதிக்கு புதிய காவல் நிலையம் வேண்டி குளித்தலை நகர திமுக செயலாளரும், எம்எல்ஏ வுமான மாணிக்கம் சட்டமன்றத்தில் காவல் துறை மானிய கோரிக்கையில் எடுத்துரைத்து நங்கவரம் பகுதியில் புதிய காவல் நிலையம் பெற்று தந்தமைக்கு நங்கவரம் பேரூர் நகர திமுக சார்பில் நங்கவரம் பேரூர் கழக செயலாளர் முத்து (எ) சுப்பிரமணி தலைமையில் பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் அன்பழகன் ஆகியோர் நன்றி தெரிவித்து எம்எல்ஏ மாணிக்கத்திற்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

குளித்தலை ஒன்றிய செயலாளர் சந்திரன், தோகைமலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் புழுதேரி அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி நச்சலூர் சங்கர், ஒன்றிய பிரதிநிதி செல்வம், விவசாய அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், தோகைமலை திமுக இளைஞரணி செயலாளர் சசிகுமார், நெய்தலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் காந்தி கலந்து கொண்டனர்.குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு

The post நங்கவரத்தில் புதிய காவல் நிலையம் திமுகவினர் எம்எல்ஏவுக்கு நேரில் நன்றி தெரிவிப்பு appeared first on Dinakaran.

Tags : police station ,Nangavaram ,DMK ,MLA ,Kulithalai ,Manikam ,station ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...