- Darmapuri
- நல்லம்பள்ளி யூனியன்
- தோப்பூர் குறும்புத்துறை புதூர் தொடக்கப் பள்ளி
- தலை
- முத்துமிச்செல்வி
- சோலையனூர் அரசு நடுநிலைப் பள்ளி அறிவியல்
- தின மலர்
தர்மபுரி: நல்லம்பள்ளி ஒன்றியம், தொப்பூர் குறுவளமையத்தில் டி.புதூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை முத்தமிழ்ச்செல்வி மற்றும் சோளியானூர் அரசு நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பிரகாஷ் ஆகியோருக்கு, பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு நல்லம்பள்ளி வட்டார கல்வி அலுவலர் சரவணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் உமாசாந்தி, செந்தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறுவள மைய ஒருங்கிணைப்பாளர் சரோஜா வரவேற்றார். பணி நிறைவு பெறும் ஆசிரியர்களை பாராட்டி, மலையூர் காடு, மணியகாரனூர், புக்கம்பட்டியான் காட்டுவளவு, சோளியானூர், பாப்பம்பட்டி, கஸ்தூரி கொம்பை, கம்மம்பட்டி, சந்திரநல்லூர், டி புதூர், தொப்பூர்,உம்மியம்பட்டி மற்றும் காணிகரஅள்ளி பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டு நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில், ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ஆனந்தவேல், கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். உம்மியம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ராதாகிருஷ்ணன், கலந்து கொண்ட அனைவருக்கும் பலா மரக்கன்று வழங்கினார். உம்மியம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நரசிம்மன் நன்றி கூறினார்.
The post ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு appeared first on Dinakaran.