×

மத்தியபிரதேசத்தில் ரயிலில் தீ விபத்து

ரத்லம்: மத்தியபிரதேசத்தில் நேற்று காலை ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் உயிர் சேதம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் நேற்று ரத்லம்-அம்பேத்கர் நகர் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. ரத்லமில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரீத்தம் ரயில் நிலையத்தில் நேற்று காலை 7 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கு காயம் ஏற்படவில்லை.

The post மத்தியபிரதேசத்தில் ரயிலில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Madhea Pradesh ,Ratlam ,Madhya Pradesh ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின்படி 2...