×

ஜம்மு தாக்குதலின் போது ஆயுதங்களை திருடிய தீவிரவாதிகள் : பரபரப்பு தகவல்

பூஞ்ச்: ஜம்முவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ராணுவத்தினரின் ஆயுதங்கள், தோட்டாக்களையும் திருடி சென்றுள்ளனர் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பூஞ்சில் கடந்த 20ம் தேதி பாதுகாப்பு வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்கள் பலியாகினர். ஒரு வீரர் படுகாயமடைந்தார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘‘ அடர்ந்த வன பகுதியில் ராணுவத்தின் வாகனம் வரும்போது, மறைந்திருந்த தீவிரவாதிகளில் ஒருவன் வாகனத்தின் முன் பகுதியை நோக்கி சுட்டான்.

அதை தொடர்ந்து மற்ற தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும்,கையெறி குண்டுகளையும் வீசியுள்ளனர். இதில், வீரர்களுக்கு திருப்பி தாக்குதல் நடத்துவதற்கு இயலாமல் போனது. இரும்பு தோட்டாக்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த வகை தோட்டாக்கள் சில பாதுகாப்பு கவசங்களையும் துளைத்து செல்லக்கூடியது. தப்பி செல்லும் போது ராணுவ வீரர்களிடம் இருந்த ஆயுதங்கள், தோட்டாக்களையம் திருடி சென்றுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 12 பேரிடம் விசாரணை நடக்கிறது ’’ என்றனர்.

The post ஜம்மு தாக்குதலின் போது ஆயுதங்களை திருடிய தீவிரவாதிகள் : பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Jammu attack ,Jammu ,Dinakaran ,
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...