பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை விருதுநகர்/ராஜபாளையம், ஏப். 23: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையை முன்னிட்டு நேற்று காலை 8 மணி அளவில் ஊர்வலம் நடைபெற்றது. சம்மந்தபுரத்தில் இருந்து இஸ்லாமிய கொடியை ஏந்தியவாறு, இறைவன் புகழ் வாசகங்களை முழக்கமிட்ட படி இஸ்லாமியர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் வட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளுவர் நகர் வழியாக வந்து, முடங்கியாறு சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் நிறைவடைந்தது. மைதானத்தின் வாசலில் இருந்த கம்பத்தில் கொடியை ஏற்றிய பின்னர் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இந்த சிறப்பு தொழுகையில் 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அரை மணி நேரம் நடைபெற்ற தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள், தொழுகை முடிந்தவுடன் ஒருவொருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு கூமாப்பட்டி கான்சாபுரம் மகாராஜபுரம், தம்பிபட்டி ரெங்கப்பனாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள மசூதிகளில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லீம்கள் புத்தாடை அணிந்து சிறப்புத்தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ஒருவரையொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
The post ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் appeared first on Dinakaran.