×

63 வேலம்பாளையத்தில் சொட்டு நீர் பாசனத்துடன் மரக்கன்று நடும் விழா

 

பல்லடம், ஏப்.23: பல்லடம் அருகேயுள்ள 63 வேலம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அறம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். ஊராட்சித் தலைவர் நடராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாலாமணி, அறக்கட்டளை துணைத் தலைவர் குட்டி பழனிசாமி, பொருளாளர் சேரன் செந்துார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் பள்ளி வளாகத்தில் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான சொட்டுநீர் பாசன வசதியுடன் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், அறக்கட்டளை ஆலோசகர்கள் அருள் பிரசாத், கார்த்திக், கணேசன் மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவியர், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயலாளர் ஷேக்மக்தும் நன்றி கூறினார்.

The post 63 வேலம்பாளையத்தில் சொட்டு நீர் பாசனத்துடன் மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Tags : 63 Tree sapling ceremony ,Velampalayam ,Palladam ,63 ,Velampalayam Government High School ,Aram Foundation ,Dinakaran ,
× RELATED திருநங்கையை தாக்கியவர் கைது