×

தஞ்சாவூரில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை

தஞ்சாவூர்: இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் விளங்குகிறது. இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும். இதையடுத்து பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.அதன்படி நேற்று பிறை தெரிந்ததையடுத்து நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.தஞ்சை மாநகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தஞ்சை கீழவாசல் அறிஞர் அண்ணா திருமண மண்டபம் முன்பு (உருது ஸ்கூல் திடல்) நேற்று காலை ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை மாநகர கிளை தலைவர் அப்துல்லா, செயலாளர் ஜியாவூதீன், பொருளாளர் சலீம், நிர்வாகிகள் முகமது முஸ்தபா, காலித், செய்யது முஸ்தபா, மாவட்ட மாணவரணி செயலாளர் யாசர் அராபத் ஆகியோர் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு தொழுகையில் கிளை இமாம் மாவட்ட பேச்சாளர் சேக் அப்துல் காதர், ரமலான் மாதம் நோன்பு குறித்தும், பண்டிகையின் நோக்கம் குறித்தும் பேசினார்.இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். முடிவில் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

The post தஞ்சாவூரில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை appeared first on Dinakaran.

Tags : Ramzan ,Thanjavur ,Ramadan ,Muslims ,Ramadan.… ,
× RELATED ரம்ஜான் நாளில் அரங்கேறிய நெகிழ்ச்சி...