×

வெள்ளலூர் குளத்தில் பட்டாம்பூச்சி பூங்கா மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்

மதுக்கரை, ஏப்.23: கோவை வெள்ளலூர் குளத்தில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கும் பணியை கலெக்டர் அடிகல் நாட்டி துவக்கி வைத்தார்.கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலூர் குளம் உள்ளது. நொய்யல் ஆற்றில் இருந்து வாய்க்கால்கள் வழியாக இந்த குளத்திற்கு தண்ணீர் வந்து நிறைந்த பிறகு மீண்டும் அந்த தண்ணீர் நொய்யல் ஆற்றுக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாததால் இந்த குளம் வறண்டு காணப்பட்டது. பின்னர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் முயற்சி காரணமாக நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதை தொடர்ந்து குளத்திற்கு தண்ணீர் வந்து நிரம்பிய நிலையில் உள்ளது.

The post வெள்ளலூர் குளத்தில் பட்டாம்பூச்சி பூங்கா மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : District Collector ,Butterfly Park ,Vellalur Pond ,Madhukarai ,Collector ,Adikal Nathi ,Vellalur Pond, Coimbatore ,Coimbatore ,
× RELATED கலெக்டரிடம் கோரிக்கை மனு