×

நெல்லையில் ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் சிறப்பு தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நெல்லை: புனித ரம்ஜானை முன்னிட்டு நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடந்த சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலப்பாளையம் பஜார் திடலில் தமுமுக, இஸ்லாமிய பிரசார பேரவை சார்பில் நடந்த நோன்பு பெருநாள் தொழுகையில் பாசில் ஷா பிர்தவுசி தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார். தமுமுக, மமக மாவட்டத் தலைவர் ரசூல்மைதீன், செயலாளர் கோல்டன் காஜா, பொருளாளர் தேயிலை மைதீன், துணைச் செயலாளர் காஜா, பகுதி தலைவர் யூசுப் சுல்தான், பகுதி செயலாளர்கள் அப்துல்காதர், பாதுஷா, பொருளாளர் அசன் மைதீன், மருத்துவ சேவை அணி செயலாளர் குதா முகம்மது, ஊடக அணி செய்யது அப்துல்காத், இளைஞர் அணி மாநில பொருளாளர் ரியாசுர் ரகுமான், மருத்துவ சேவை அணி ரசூல் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக மேலப்பாளையம் முழுவதும் ஆயிரம் குடும்பங்களுக்கு பித்ரா அரிசி வழங்கப்பட்டது.

மேலப்பாளையம் விரிவாக்கம் பகுதி கரீம் நகர் மஸ்ஜித் ஹூதா பள்ளி வாசல் சார்பில் மதீனா சிபிஎஸ்இ பள்ளி திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. பள்ளிவாசல் தலைவர் சாகுல் அமீது உஸ்மானி பெருநாள் உரையாற்றினார். எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் ‘‘பசித்தோருக்கு உணவளியுங்கள். நலிவடைந்தவர்களுக்கு உதவுங்கள். அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள் என இஸ்லாம் எடுத்துரைத்த சகோதரத்துவத்தை நம் வாழ்வில் உறுதியாக பற்றி பிடித்திடுவோம். மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவ ஒற்றுமையையும் காத்திடுவோம், இறைதூதர் வழியில் வாழ்ந்து சிறந்திட இறைவனை வேண்டுவோம்’’ என்றார்.

இதில் பள்ளிவாசல் நிர்வாகிகள் முஸ்தபா, ஜாபர் அலி, ஜவஹர், தாவுத், ஹாஜியார், முஸ்தபா, ஜெய்னுல்ஆபதீன், கட்சி நிர்வாகிகள் கனி, லெப்பை, கல்வத், சலீம் தீன், சிந்தா மற்றும் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை டவுன் கிளை சார்பில் லாலுகாபுரம் ஈத்கா திடலில் சிறப்புத் தொழுகையை டவுன் தவ்ஹீத் ஜமாத் பள்ளி இமாம் முகமது மைதீன் நடத்தினார். மேலப்பாளையம் சித்திக் குத்பா பேசினார். இதில் ஜாமியா பள்ளி தெரு, கல்லணை தெரு, கான் மியான் பள்ளி தெரு, ஆசாத்நகர், அமீர்சாஹிப் நகர், பழையபேட்டை, சிக்கந்தர்புரம் தெரு, குற்றாலம் ரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

மின்னல் அறக்கட்டளை நிறுவனர் மில்லத் இஸ்மாயில், நெஸ்ட் பில்டர்ஸ் பங்குதாரர்கள் நிஸ்தார், சித்திக் நியமத்துல்லா, காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அனஸ் ராஜா, மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர் காதர்மைதீன் ரஷீத் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை டவுண் கிளை நிர்வாகிகள் அப்துல்கரிம், ஷமிம் கப்பார், ரயில்வே கரிம், அன்வர், ஜாமியா பீரப்பா உள்ளிட்ட பலர் செய்திருந்தனர். பேட்டை முகமது நயினார் பள்ளிவாசலில் நடந்த சிறப்புத்தொழுகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் முன்னாள் எம்எல்ஏ கோதர் முகைதீன், பேட்டை ஜமாத் தலைவர் ப.த.திவான் பக்கீர் முகைதீன், ஷேக் அப்துல் காதர்,பீர் முகைதீன் ரகுமான் பேட்டை ஹனிபா, வக்கீல் மதார் முகைதீன் பங்கேற்றனர்.

மேலப்பாளையம் நைனார் முகமது மூப்பன் ஜும்ஆ பள்ளியில் ஜலீல் உஸ்மானி தலைமையில் நடைபெற்றதொழுகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் எல்கேஎஸ் மீரான் முகைதீன், சதக்கத்துல்லா கல்லூரி கல்விக்குழு உறுப்பினர் நவாப் உசேன், பஜார் கடை பள்ளி பெருநாள் தொழுகையில் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆட்சிக்குழு பொருளாளர் டிஎஸ்எம்ஓ அப்துல் மஜீத் பங்கேற்றனர். ஹாமீம் பள்ளிவாசலில் முன்னாள் எம்எல்ஏ விஎஸ்டி சம்சுல் ஆலம், கவுன்சிலர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், ஜாஹிர், மில்லத் காஜா, நெல்லை டவுண் பட்டப்பத்து பள்ளிவாசலில் மாவட்டச் செயலாளர் முகமது அலி, நயினார் முகமது கடாபி, பாதுஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post நெல்லையில் ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் சிறப்பு தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Ramazan festival of rice paddies ,Nellai ,holy ,Ramzan ,Melapalayam Bazar… ,Ramadhan festival ,kolagala ,Nella ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!