×

திருவொற்றியூரில் கிடப்பில் போடப்பட்ட டிரான்ஸ்பார்மர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிகளை விரைந்து, முடித்து மக்கள் பயன்பாட்டிற்க கொண்டு வர வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 6வது வார்டுக்குட்பட்ட ராஜா சண்முகம் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு அடிக்கடி குறைந்த மற்றும் உயர் மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் மின்சாதனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, இங்கு புதிதாத டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்தது.அதன்பேரில், கடந்த ஆண்டு இந்த பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியம், ஜோதி நகர் மின் நிலையம் சார்பில், பல லட்சம் ரூபாய் செலவில் டிரான்ஸ்பார்மர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்ட நிலையில், ஒரு வருடமாகியும் அதில் டிரான்ஸ்பார்மர் பொருத்தாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதியில் தொடர்ந்து மின்னழுத்த பிரச்னை காரணமாக மக்கள் சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக, தற்போது கோடை காலம் என்பதால் கூடுதல் இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். எனவே, இந்த டிரான்ஸ்பார்மர் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘டிரான்ஸ்பார்மர் பணியை விரைந்து முடிக்க வேண்டும், என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தால், மின்கம்பி இருப்பு இல்லை என்பதால் புதிய டிரான்ஸ்பார்மர் பணியை முடிக்க முடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே தமிழ்நாடு மின்சார வாரிய உயர் அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

The post திருவொற்றியூரில் கிடப்பில் போடப்பட்ட டிரான்ஸ்பார்மர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Thiruvottiyur ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...