×

ஜல்ஜீவன் திட்டம் 100% நிறைவேற்றம் கலெக்டர் ஆர்த்திக்கு விருது: பிரதமர் மோடி வழங்கினார்

சென்னை: கிராமப் புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு 100 சதவீதம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசு ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை கொண்டு வந்தது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், ‘ஜல் ஜீவன்’ திட்டம் துவங்கியபின், புதிதாக 1.16 லட்சம் இணைப்புகள் கொடுக்கப்பட்டு, மொத்தம் உள்ள 2.15 லட்சம் வீடுகளுக்கு முழுதுமாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2022 அக். மாதத்தில் இந்த திட்டப்பணிகள் முடிடைந்தன. இதுமட்டுமல்லாமல், குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்ய மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள், அவ்வப்போது குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்கின்றனர். கிராம அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார கண்காணிப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இக்குழு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் செல்வதை கண்காணிக்க வேண்டும். பைப் லைன் பழுது, சீரமைத்தல் உள்ளிட்டவற்றை செய்ய இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ், 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக ஒன்றிய அரசின் பிரதமர் விருது, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்திக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கான விருது வழங்கும் விழா புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் மோடி, கலெக்டர் ஆர்த்திக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். மேலும்

The post ஜல்ஜீவன் திட்டம் 100% நிறைவேற்றம் கலெக்டர் ஆர்த்திக்கு விருது: பிரதமர் மோடி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Chennai ,Modi ,Dinakaran ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...