×

பராமரிப்பு பணிக்காக புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் 2 நாள் செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 25, 26 ஆகிய இரண்டு நாட்களுக்கு புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 25 மற்றும் 26ம் தேதிகளில் மண்டலம் 8க்குட்பட்ட புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது. எனவே, மண்டலம் 4, 5, 6, 7 மற்றும் 8க்குட்பட்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை ஏற்பட்டால் அவசர தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற பகுதி அலுவலர்கள் மற்றும் தலைமை அலுவலக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம், என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

The post பராமரிப்பு பணிக்காக புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் 2 நாள் செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Purasaivakkam ,Chennai ,Kodunkaiyur Sewage Treatment Plant ,Plant ,
× RELATED நினைத்தது நடக்கவில்லை என்பதால்...