×

ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

சேலம்: சேலம் கன்னங்குறிச்சி 6வது வார்டு கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்தவர் சம்பத், கூலித்தொழிலாளி. இவரது மகன் பிரசாந்த் (17). இவர் பிளஸ் 2 தேர்வை எழுதியுள்ளார். பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மெக்கானிக் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் பாலாஜி (16), பிளஸ் 1 தேர்வு எழுதியுள்ளார். அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகன் தமிழ்மணி (13), கன்னங்குறிச்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று பகல் 12 மணியளவில், மாணவர்கள் 3 பேரும் ஒரே டூவீலரில் அருகில் உள்ள தாமரைநகர் பகுதியில் உள்ள புதுஏரிக்கு குளிப்பதற்காக சென்றனர்.
பிரசாந்த்தும், பாலாஜியும் ஏரி உள்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர். தமிழ்மணிக்கு நீச்சல் தெரியாததால், கரையில் இருந்து குளித்துக்கொண்டிருந்தான்.
அப்போது பிரசாந்தும், பாலாஜியும் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி இறந்தனர்.

The post ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Kannankirichi ,Ward ,Sambat ,Govindasamy Colony ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை